districts

img

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை !

காஞ்சிபுரம், ஜூலை 17 - உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீ காரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி  செவ்வாயன்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில், மாவட்ட தலைவர் பெ.ப.பாலாஜி, மாவட்டச் செயலாளர் வி.முனுசாமி, பொருளாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் எம்.லோகநாயகி, ஜி.பாக்கியராஜ், அர்ஜுன், எம்.டில்லி பாபு, என்.அன்பு, கே.அண்ணாதுரை உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று முற்றுகையிட முயன்றனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழையு வாயில் கதவுகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் பாய், தலையணையுடன் மாவட்ட ஆட்சி யர் நுழைவாயில் அருகே சென்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி ஆகியோர் போராட்டக் குழுவி னரை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.