districts

காஞ்சிபுரம் ஜமாபந்தியில் உடனடி பட்டா

காஞ்சிபுரம், ஜூன் 15 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்வினை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

தென்னேரி குறுவட்டம் சார்ந்த எட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப் பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி மனு அளித்த னர். மனுக்களை பெற்ற ஆட்சியர் அதனை உரிய தீர்வு காணும் வகையில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு ஆலோ சனைகளை கூறினார். அதேபோல் திருப்பும் குழி குறு வட்டம் சார்ந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய நபர்கள் 5 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.