districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி அரசுப் பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

காஞ்சிபுரம், ஜூன் 20 –  சின்னகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு பூட்டிகிடந்த நவீன கழிப்பறை குறித்த செய்தி தீக்கதிரில் வெளியானதையடுத்து உடனே  திறக்கப்பட்டு மாணவியர்களின்  பயன்பாட்டிற்கு கொண்டு  வரப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொகுதி  மேம்பாட்டு     நிதியிலிருந்து 49.5 லட்சம்  மதிப்பீட்டில்  டிஎம்எஸ்  அரசு மகளின் மேல்நிலைப் பள்ளியில் அதிநவீன வசதிகளின்  கூடிய கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக் கிடந்தது. இதனை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என தீக்கதிரில் அண்மையில் செய்தி வெளியானது.

இதனையொட்டி பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதிகளை மாணவியர் பயன்பெறும் வகையில் மீதமுள்ள  கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.