காஞ்சிபுரம், ஜன.23 காஞ்சிபுரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.24 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே உள்ள தாமரைத் தாங்கல் பகுதியில் உள்ள குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 லாரிகள், 2 மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சசிகுமார், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.