districts

img

பூட்டிக்கிடக்கும் அரசு பள்ளியின் நவீன கழிப்பறை: மாணவிகள் அவதி

காஞ்சிபுரம், ஜூன் 11 – காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  பூட்டிக்கிடக்கும் புதிய தாக கட்டப்பட்ட நவீன கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொது மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதி யில் உள்ள பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1700க்கும் மேற்பட்ட மாணவி கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி யில், மாணவிகளுக்கு கூடுதல் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், பள்ளி வளாகத்திற்குள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் மாணவி கள் பயன்பாட்டிற்காக அதிநவீன கழிப்பறை கட்டும் பணியை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  இந்த கழிப்பறையில் டைல்ஸ் கல்லுடன்

19க்கும் மேற்பட்ட வெஸ்டர்ன் கழிவறை, 1 பொருட் சேம அறை (ஸ்டோர்ரூம்), 10 தானி யங்கி குழாய் உள்ளிட்ட  அதிநவீன வசதிகளுடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு  கழிப்பறை கட்டுமானப் பணி நிறைவடைந்தது. 5மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறையை, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படா மல் உள்ளது. மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை. இங்கு, 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. சராசரியாக ஒரு கழிப்பறையை, 425 மாணவியர் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

நீண்டநேரம் காத்திருந்து கழிப்பறை செல்வதால் மாணவிகள் அவதிக்கு  ஆளாகின்றனர். பெரும்பாலான மாணவியர் கழிப்பறை செல்வதையே தவிர்க்கின்றனர். இதற்காக பள்ளி நேரங்களில், தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்துவிடுவதால், அவர்கள் சிறுநீரக தொற்று,சிறுநீரக கல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

 பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதிகளை, மாணவியர் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டும் பயன்படுத்த முடியாத அவலநிலையில் உள்ளது. அரசு நிர்வாகமும், கல்வித்துறையும் உடனே தலையிட்டு கழிப்பறையை முழுப்பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, தண்ணீர், செப்டிக் டேங்க், மின் இணைப்பு உள்ளிட்ட வசதி களுடன் ஏனைய பணியை முடித்தும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு துப்புரவு பணி யாளர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி, பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.