districts

எரிவாயு சிலிண்டர் குடோன் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

காஞ்சிபுரம், அக். 14- காஞ்சிபுரம் அருகே உள்ள தேவேரியம் பாக்கத்தில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவர் அதே பகுதியில் கேஸ் சிலிண்டர் குடோன் வைத்திருந்தார்.   இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதிதா (24), சந்தியா, பூஜா மற்றும் ஊழியர்கள் உட்பட 12 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். இதில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் அவரது மகள்கள் பூஜா, சந்தியா உள்பட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஜீவா னந்தத்தின் மூத்த மகள் நிவேதிதாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை நிவேதிதாவும் பரிதாபமாக இறந்தார். இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியான நிவேதிதா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;