districts

img

கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

காஞ்சிபுரம்,டிச.12-  கடந்த 4 நாட்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரண மாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  செங்கல்பட்டு, காஞ்சி புரத்தில் ஏரிகள் கனமழை காரணமாக நிரம்பி வரு கிறது. இப்பகுதியில் பாலாறு, செய்யாறு, வேக வதி ஆறு இந்த மூன்றும் ஆறும் ஒன்றாக சங்க மிக்கும் பகுதி தான் திரு முக்கூடல் ஆகும். பழைய சீவரம் பகுதி யில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தற்போது முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதி கடல் நீர் போல் காட்சியளிக்கிறது. வினாடிக்கு 10,000 முதல் 15,000 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.  பொதுமக்கள் பாலாற்றுகரையில் துணி துவைத்தல், குளித்தல், செல்போன்களில் புகைப் படங்கள் எடுப்பது ஆகிய வற்றை தவிர்க்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரண மாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 907 ஏரிகள் உள்ளன. அதில் 430 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளன. இதன் தொடர்ச்சி யாக  மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.