காஞ்சிபுரம், மார்ச் 14 - காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பூங்காவில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஞாயிறன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் அலுவல கத்தில் மட்டும் ஒரு சிலர் பணி செய்து வந்தனர். சுமார் 4 மணி அளவில் திடீரென உள்ளே உள்ள மூலப்பொ ருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அலுவ லக ஊழியர்கள் அருகி லுள்ள தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரி வித்தனர். 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்கப்பட்டது. இந்நி லையில் அந்த நிறுவனத் திற்குள் உள்ளே இருந்த மூலப்பொருட்கள் அட்டை ரோல்கள் இயந்திரங்கள் என அனைத்தும் எரிந்து சாம்ப லாகின.