காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட சிக்கராயபுரம் நியாய விலை கடை வாரம் முழுவதும் திறந்து செயல்பட முழுநேர ஊழியரை நியமிக்க வேண்டும், சிக்கராயபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிக்கராயபுரம் கட்சி கிளைகள் சார்பில் தெருமுனைக் கூட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ரமேஷ், கே.நேரு, விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் டி.லிங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.எல்.கார்த்திக், வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார், குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கு.வெங்கடகுரு, கிளைச் செயலாளர்கள் எம்.மோகனன், ஆர்.மணி, எஸ்.ராஜாமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.