districts

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  திருவாங்கரணை கிளை மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ஞாயிறன்று (மே 15) ரத்ததான முகாமை நடத்தின.  இதில் 36 பேர்  ரத்ததானம் செய்தனர்.  மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் ஆ.மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள்  ஏ.சண்முகபாபு, மு.யுவராஜ், ஆ.ராஜா மு.முருகன், ஆ.பிரபாகரன்,   படப்பை பகுதி செயலாளர் மு.அன்பரசு,   காஞ்சி நகர தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  சிபிஎம் வட்டச் செயலாளர் ஆறுமுகம்  திருவாங்கரணை லாரன்ஸ், சிவலிங்கம்,  வாலாஜாபாத் ஓன்றிய கவுன்சிலர் துரை , ஊராட்சித் தலைவர்கள் வடிவுக்கரசி ஆறுமுகம் (களியனூர்), உ.பாஸ்கர் (பழவேறி), ரவி (அயிமிச்சேரி), மு.அர்ஜூனன் (பண்ருட்டி), தமிழ்பாரதி ( குண்ணம்), தீபிகா லோகநாதன் (திருவாங்கரணை),   ஆ. விஜய் (துணை தலைவர்),  டி.வேலுமணி (ஊராட்சி செயலர்),  வேலுமணி (ஓன்றிய தலைவர்),  டாக்டர் மைக்கேல்  (சர்வதேச மனித உரிமை கழகம்) ஆகியோர் பேசினர்.

;