கள்ளக்குறிச்சி,பிப்.24- மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு: கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் இளம்பயிரில் சராசரியாக 20 முதல் 35 விழுக்காடும் வளர்ந்த பயிரில் 25 முதல் 35விழுக்காடும், இளம் கதிர் மற்றும் கதிர் முற்றும் பருவத்தில் 10 முதல் 20 விழுக்காடும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலும் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைப்பதன் மூலமும் இப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விதை நேர்த்தி மருந்து களான சயன்ட்ரனி லிப்ரோல் 19.8 விழுக்காடு மற்றும் தையோமெத்தாக்சம் 19.8 விழுக்காடு என்ற மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. விதை நேர்த்தி செய்து விதைத்தல் வேண்டும். வரப்பு மற்றும் ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயறு மற்றும் எள் போன்றவைகளை நடவு செய்வ தன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்ப துடன் படைப்புழுவின் தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம். மேலும் இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 4 எண்கள் என்ற அளவில் அமைத்து படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கண்காணித்து அழிக்கலாம். இளம் பயிரில் 1500 பி.பி.எம். அசாடிராக்டின் 1 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்த லாம். இந்த புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் கீழ்காணும் ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15 முதல் 20 நாட்கள் விதைத்த பின்னர் தாக்குதல் காணப்படின் குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சத திரவம் 440 முதல் 45 நாட்களில் தாக்குதல் காணப்பட்டால் இமா மெக்டின் பென்சோயேட் 5 ஷிநி 4 கிராம், மேலும் தேவைப்பட்டால் 3-வது முறையாக கதிர்பிடிக்கும் பரு வத்தில் ஸ்பைனிடோரம் 17.7 சத திரவம் 5 மி.லி. என்ற அளவில் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் குருத்து பகுதியில் நன்கு படும்படி தெளித்தும், இப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.