districts

img

தரமற்ற தண்ணீரால் பாதிக்கும் கிராமமக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி, ஜூலை 17 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது இருந்தை கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த பகுதியில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு கவுன்சிலர் நிதியிலிருந்து மாதங்குளம் கேபி பகுதியில் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. இதில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது

 இந்த தண்ணீர் உப்பும், பச்சை நிறமும் கலந்து வருவதால் குடித்தும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் உடல் முழுவதும் அரிப்பு, சிறு சிறு கொப்பு ளங்கள் ஏற்படுகிறது. மேலும், குழந்தை களை சரும வியாதிகள் தாக்கி வருகிறது.

பெண்கள் வயிற்று வலி, சிறு நீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சமைக்கும் உணவு மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகிறது. இந்த  நீரில் குளிப்பதால்  தலைமுடியும் கொட்டு வதாகவும் கிராம மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம்  முறையிட்டும்,  வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலு வலரிடம் கேட்டபோது,“உடனடியாக பரி சோதனை செய்து  நடவடிக்கை எடுக்கப் படும்” என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

இருந்தை கிராம மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு அதிகாரிகள்  தங்களின் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்றினால் இது போன்ற பிரச்சனைகளை உடனுக்கு உடன் சரி செய்துவிட முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.a