districts

img

காலிப் பணியிடம்: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 29- கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என  ஆட்சியர் ஸ்ரீதர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:- இம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலு வலகத்தில் வரவேற்பாளர் பணி இடத்திற்கு 100 விழுக்காடு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உள்ள, 8ஆம் வகுப்பு படித்த, ஒயர் நாற்காலிகள் பின்னத் தெரிந்த மாற்றுத் திறனாளிகள் பொதுப் பிரிவில் 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் 100 விழுக்காடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வரும் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன்  விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.