கள்ளக்குறிச்சி, ஜூன் 17 - உளுந்தூர்பேட்டை ஒன்றியம் சீய மங்கலம் கொட்டையூர் வழியாக உளுந்தூர் பேட்டைக்கு அரசு பேருந்து இயக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து துறை அதி காரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து சிபிஎம் சார்பில் அண்மை யில் எலவனாசூர் கோட்டையில் சாலை மறி யல் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜே.மணிக்கண்ணன், அரசு போக்கு வரத்து துறை அதிகாரிகள் உடனடி யாக பேருந்தை இயக்குவதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பேரில் சீயமங்கலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் கொடியசைத்து பேருந்து துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செய லாளர் கிழக்கு வைத்தியநாதன் மாவட்ட கவுன்சிலர்கள் போக்குவரத்து துறை அதி காரிகள், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜி. அருள்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.