districts

img

தியாகதுருகம் அருகே அமைகிறது சுற்றுலா மாளிகை

கள்ளக்குறிச்சி, டிச. 5- விழுப்புரம் மாவட்டத்தி லிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் துறை அலுவலகங்கள் கட்டு வதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் புதிதாக  தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு தலா  ரூ.7.05 கோடியில் சுற்றுலா மாளிகைகள் அமைப்பதற்கு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் பகுதியில் சுற்றுலா மாளிகை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு  துறைமுகங்கள் துறை  அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், கார்த்தி கேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாத், தலைமை பொறியாளர் விஸ்வநாதன், கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம், வரு வாய் கோட்டாட்சியர் பவித்ரா, செயற்பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.