கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி குத்து விளக்கை ஏற்றி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இதில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், துணை சேர்மன் விமலா முருகன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், மாவட்ட பிரதிநிதி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.