கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது 5 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,200 மதிப்பிலான அக்குள் கட்டைகளும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.400 மதிப்பிலான எல்போகிரட்சஸ்களையும் ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் அலுவலர் சத்யநாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.