கள்ளக்குறிச்சி, ஜூலை 18 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். இதில்உளுந்தூர்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உளுந்தூர் பேட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ததை பார்வையிட்டு பேருந்து நிலை யம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு உளுந்தூர்பேட்டை புறநகர் வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் அரசு சார்பில் பிள்ளையார் குப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை துவங்கி வைத்தார். 17 துறைகளின் சார்பில் பொதுமக்களி டம் மனுக்களை பெற்று உரியமுறையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இதில் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன்,உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம், சிபிஎம் ஆத்தூர் ஒன்றிய கவுன்சிலர் இ.அல மேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.