districts

img

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 43 ஆனது

சென்னை, ஜூன் 20- கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்ப வத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 20)  சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் முதலமை ச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை செய லகத்தில் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புவருமாறு:-

நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வு !கள்ளக்குறிச்சி, ஜூன் 20 -
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரு
ணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த
வர்களின் எண்ணிக்கை 43 ஆக அதி
கரித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் 
மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்
குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தக
வல்கள் வெளியாகி உள்ளன.

 

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்க கூடாத ஒன்று என்பதால் தற்போது அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து வருகிறேன்.

மெத்தனால் கலந்த விஷ சாராய தயாரிப்பிலும், விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய  வேண்டும். இச்சம்பவத்தில் பயன்படுத்தப் பட்ட மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழிக்க வும் அறிவுறுத்தியுள்ளேன். அந்த மெத்த னால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூல காரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தி யுள்ளேன். 

2 நாட்களில் ஆய்வு அறிக்கை

உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று,  ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை இரண்டு நாட்களில் வழங்குவார்கள்.

ஒரு நபர் விசாரணை ஆணையம் 

இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமை யான விசாரணை மேற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, ஓய்வு  பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக் கிறார்.

கள்ளக்குறிச்சி, ஜூன் 20 - கள்ளக்குறிச்சி மாவட்டம், கரு ணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 43 ஆக அதி கரித்துள்ளது. மேலும், நூற்றுக்கும்  மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக் குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த  கிருஷ்ணாபுரத்தில் கள்ளச்சாரா யம் அருந்திய ஏராளமானோர் கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச் சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இவ்வாறு அனு மதிக்கப்பட்டவர்களில் இதுவரை 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. 

இதைத் தொடர்ந்து, அமைச் சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிர மணியன் ஆகியோர் கள்ளக் குறிச்சி யில் முகாமிட்டு நிவாரணப் பணி களை முடுக்கிவிட்டுள்ளனர்.

தொடரும் மரணங்கள்

இதனிடையே உயிரிழப்புகள் எண்ணிக்கை படிப்படியாக அதி கரித்து வருகிறது. 

சிகிச்சை பலனின்றி ஜெகதீசன், கந்தன், சுரேஷ், செல்வம், ஆறு முகம், நூர் பாஷா, அய்யாவு, முருகன், தனுஷ்கோடி, கோபால், கண்ணன், பூவரசன், கணேசன், குப்புசாமி, லஷ்மி, ஜெகதீசன், ராம கிருஷ்ணன், சுரேஷ், முருகன், சின்ன பிள்ளை, நூர் பாஷா, கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா,  வடிவு, ரவி ஆகியோர் கள்ளக் குறிச்சி மருத்துவமனையில் உயிரி ழந்தனர்.

சேலம் மருத்துவமனையில் நாராயணசாமி (மாதவசேரி, கள்ளக்குறிச்சி), சுப்பிரமணி (கருமாபுரம்), ராமு (வாய்க்கால் மேடு தெரு), ஆனந்தன் (கருணா குளம்), ரவி(பழைய மாரியம்மன் கோவில் தெரு), விஜயன்( கருணா புரம்), மனோஜ் குமார் ( கோட்டை மேடு), ஆனந்தன் (விளாந்தாங்கல் ரோடு), ராஜேந்திரன் (ராஜா தெரு சேஷசமுத்திரம்) ஆகியோர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சுரேஷ், பிரவீன், சேகர், மணி கண்டன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் 29 உடல்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் 21 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் அடக்கம் செய் யப்பட்டன.

உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர்கள் நேரில் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷ  சாராயம் அருந்தி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருபவர் களை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்  சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்தார். மேலும், உயர் சிகிச்சை அளிக்க முத லமைச்சர் அறிவுறுத்தி இருப்பதை யும் கூறினார். இதைத் தொடர்ந்து, கருணாபுரம் பகுதிக்கு சென்ற உதயநிதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணி யன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்

இந்த கொடூரமான நிகழ்வில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம், மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரு வோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் முத லமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சாராயம் விற்ற 3 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள துயர சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. விசாரணை அதிகாரி யாக ஏடிஎஸ்பி கோமதியை தமிழக அரசு நியமித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவலர்கள் தங்களது பணிகளை உடனடியாக தொடங்கினர். 

கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு நடந்த பரிசோத னையில், சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது கண்டறியப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்  இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறையீட்டை வெள்ளிக்கிழமை (ஜூன் 21) விசாரணைக்கு எடுத்துக்  கொள்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.