கள்ளக்குறிச்சி மாவட்டம்.18 கள்ளக்குறிச்சியில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய புத்தக திரு விழா வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் 3-வது நாளான சனிக்கிழமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் புத்தகக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலையில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தி யாளர்க ளிடம் பேசிய ரவிக்குமார், கள்ளக்குறிச்சி மாவட் டத்தின் சார்பில் மிகச் சிறப்பான முறை யில் புத்தகத் திருவிழா ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கா னோர் பங்கேற்று பயன டைந்து வருகின்றனர். இந்த புத்தகத் திருவிழா வில் முன்னணி பதிப்ப கங்கள் பங்கேற்று வர லாறு, போட்டி தேர்வு புத்த கங்கள் உள்ளிட்ட பல்லா யிரக்கணக்கான நூல்களை காட்சிப்படுத்தியுள்ளனர். காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறுதுறைகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நடைபெறுவது புத்தகத் திருவிழாவாக மட்டுமல்லாமல் பண்பாட்டுத் திருவிழாவாக மாவட்ட நிர்வாகம் ஒருங்கி ணைத்துள்ளது வரவேற்கத் தக்கது. தமிழக அரசு பாடநூல் கழகம் மூலம் வெளியிடப்பட்ட நூல்கள், மற்றும் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்றுச் செய்திகள், முக்கிய நபர்கள் ஆகியோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுகின்ற பழக்கம் ஏற்கனவே இருந்தது. அதை மீண்டும் புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சி யர் நேர்முக உதவியாளர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சி யர்கள் பவித்ரா, யோக ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.