கள்ளக்குறிச்சி,ஜன.5- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்திலுள்ள வடுகம் பாளையம் கிராம நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டதில் பட்டா தாரர் பெயர் தவறுதலாக உள்ளதை திருத்தம் செய்து பட்டா வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர், ஜெயமூர்த்தி, பச்சையப்பன், செல்வ ராஜ், பாண்டியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிறகு, உளுந்தூர்பேட்டை வரு வாய் வட்டாட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையில் வருகம்பாளையம், கூத்தனூர், பல்லவாடி, கொம்ம சமுத்திரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும் என்று உடன்பாடானது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.