districts

img

கள்ளக்குறிச்சியில் இதய சிகிச்சை மையம் துவக்கம்

கள்ளக்குறிச்சி, ஆக..30- கள்ளக்குறிச்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சஞ்சீவி மருத்துவ மனை வளாகத்தில் இதய சிகிச்சை மையம் மற்றும் டயாலிசிஸ் பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவர்கள் சுஜாதா ரவிச்சந்திரன். வித்யா இளையராஜா. ப்ரீத்தி சுரேஷ். நந்தினி கோபிநாத். சுஜாதா பாலச்சந்தர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். இந்திய மருத்துவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் மருத்துவர் மகுடமுடி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பி னர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்தி கேயன், மணிக்கண்ணன், செந்தில்குமார், சிந்தனைச் செல்வன், முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு ஆகியோர் இதய தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை அரங்கம், ஆஞ்சியோ அறை, இருதய ஸ்கேன், டயாலிசிஸ் அறை ஆகிய வற்றை திறந்து வைத்தனர். சுகாதார பணிகள் இணை இயக்குநர்கள் சம்பத், பாலச்சந்தர், ராஜா தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, டாக்டர்கள் ரவிச்சந்திரன். இளையராஜா, சுரேஷ், குமரேசன், முத்துக் குமார்,குமார், அன்புச் செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதய சிகிச்சை நிபுணர் கோபிநாத் நன்றி கூறினார்.

;