districts

img

கள்ளக்குறிச்சி: தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 10ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக  6 மாத சந்தா78,ஆண்டு சந்தா 35,என 113 தீக்கதிர் சந்தா வுக்கான தொகை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 900 ஐ சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பெற்றுக்கொண்டார்.  இரண்டாம் கட்டமாக வரும் ஜூலை 20 தேதி கூடுதலாக சந்தாக்கள் ஒப்படைக்கப்படும் என மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ’கூறினார். தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் எம்.கே.பூவராகவன், மாவட்ட குழு உறுப்பினர் இ.அலமேலு, ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ்.மோகன்,ஜே, ஜெயக்குமார், ஆர்,சீனிவாசன், ஆகியோர் உடன் இருந்தனர்.