districts

img

சட்டப் பேரவை பொது கணக்கு கள்ளக்குறிச்சியில் குழு கள ஆய்வு

கள்ளக்குறிச்சி, மார்ச் 11- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுவினர் கள ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுத் தலை வர் செல்வப்பெருந்தகை தலைமையி லான குழுவினர் வசந்தம் கார்த்தி கேயன், வேல்முருகன், பிரகாஷ், சிந்தனைச் செல்வன், ராஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். வி.கூட்டுச்சாலை யில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி கழகத்திலுள்ள ஆட்டுப் பண்ணையை பார்வையிட்டனர். பிறகு, சின்னசேலம் பேருந்து நிலையம் விரிவாக்கம், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம், சங்கராபுரம் அரசு மருத்துவமனை புதிய கட்டி டங்கள், ரிஷிவந்தியம் அர்த்த நாரீஸ்வரர் கோவிலை புனர மைப்பு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 765 மதிப்பில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பங்கேற்றனர். உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சட்டமன்ற பேரவை ஆய்வு குழுச் செயலாளர் சீனிவாசன், வருவாய் அலுவலர் சத்யநாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.