districts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு காரணமான அனைவரையும் கைது செய்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழக்க காரணமான அனைவரையும் கைது செய்யக்கோரியும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் செவ்வாயன்று (ஜூன் 25)  மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். 2