கள்ளக்குறிச்சி, மார்ச் 21- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் மார்ச் 25ம் தேதி வெள்ளியன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் உள்ளிட்ட பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து பதிலளிக்க உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.