districts

img

கரித்துகள் கழிவுகளால் பாதிப்பு கிராம மக்கள் போராட்டம்

கரூர், ஜூன் 16 - தமிழக அரசுக்கு சொந்தமான புகளூர் காகித ஆலையில் இருந்து வெளியேறிய கரித் துகள்கள் மற்றும் நச்சு வாயுவால் மூலிமங்கலத்தில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு ள்ளது.

இதனால் அந்த கிராம மக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், புகளூரில் தமிழக அரசுக்குச் சொந்தமான காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அருகே  அரசுக்கு சொந்தமான டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையும் இயங்கி வருகிறது. இதில் காகித ஆலையில் காகிதம் தயாரிக்க கரும்பு சக்கை மற்றும் மரங்களை அரைத்து பயன்படுத்தும் போது, அதில் வேதிப் பொருள் கலக்கப்படுவதால் ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.

இதனால், ஆலையைச் சுற்றி வசிக்கும் மூலிமங்கலம், சொட்டையூர், வேலா யுதம்பாளையம், சொக்கன்காடு, கந்தம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வரு கின்றனர். மேலும் ஆலையில் எரிபொரு ளாக பயன்படுத்தப்படும் நிலக்கரியில் இருந்தும் ஏராளமான துகள்கள் காற்றில்  பறந்து வருவதால் கிராம மக்களுக்கு நோய்த்  தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

காகித ஆலை அருகே செயல்படும் டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களும் கிராம  மக்களின் வீடுகளுக்குள் புகுந்து, சிமெண்ட்  ஆலையின் கரித் துகள்களாலும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவ தாக தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் இரு ஆலைகளில் இருந்தும் கடந்த இரு நாட்களாக அதிகள வில் கரித் துகள்களும், நச்சுவாயுவும் அதிகளவில் வெளியேறியதால், பாதிக்கப்பட்ட மூலிமங்கலம் கிராம மக்கள் ஆலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆலை அதிகாரிகள் போனை எடுக்காமல், கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படு கிறது. இதனால் அப்பகுதி மக்கள் புகளூர் நகராட்சித் தலைவர் குணசேகரனை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மக்களுடன் நகராட்சித் தலைவர் குணசேகரன், வட்டாட்சியர் தனசேகரன், வருவாய் ஆய்வாளர் சுமதி உள்ளிட்டோர் ஆலை அதிகாரிகளை சந்திக்க ஆலைக்குச் சென்றனர்.  அப்போது இவர்களை ஆலைக்குள் விட, ஆலையின் நுழைவு வாயிலில் இருந்த காவலாளிகள் மறுத்துவிட்டனர்.

இதனால் கிராம மக்கள் ஆலையின் 1,2,3 ஆம் நுழைவு வாயில்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து நுழைவு வாயில்கள் மூடப்பட்டதால் ஒரு மணி வேலை முடிந்து வந்த தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் ஆலைக்குள் மாட்டிக் கொண்டனர்.  இரண்டாவது சிப்டு வேலை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதால், இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆலையின் முதுநிலை பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், முதன்மை மேலாளர்கள் (மனித வளம்) சிவக்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆலையின் நுழைவு வாயிலுக்கு வந்தனர். புகளூர் நகராட்சித் தலைவர் குணசேக ரன் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, “ஆலையில் இருந்து வெளி யேறும் கரித் துகள்களை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆலையைச் சுற்றியுள்ள தடுப்பு வேலிச் சுவர்களின் மட்டத்தை உயர்த்த வேண்டும். நச்சுவாயு வெளியேறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.  இதற்கு அதிகாரிகள், இனி இதுபோன்ற  சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்கு பின்புதான், ஆலையின் மூன்று நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டன.