கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஜோதிமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு நேரில் வந்து,தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பணியாற்றிய தற்கு நன்றி தெரிவித்தார். கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, பி.ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்.