districts

img

ரயில்வே சங்க அங்கீகாரத் தேர்தல் கரூரில் 694 வாக்குகள் பதிவு

திருப்பூர், டிச. 5 - இந்திய ரயில்வேயில் தொழிற்சங்க  அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில்  திருப்பூரில் நடைபெற்ற தேர்தலில் சிஐ டியு சங்க நிர்வாகிகள் ரயில்வே தொழி லாளர்களிடம்  டிஆர்இயு சங்கத்துக்கு ஆதரவு திரட்டினர்.

திருப்பூர் ரயில் நிலைய பகுதியில் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதில் டிஆர்இயு  சார்பில் சாம்பசிவம்,  நவீன், அசோக்,  கோபிநாத் ஆகியோர் ரயில்வே தொழி லாளர்களிடம் ஆதரவு திரட்டினர். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, பஞ் சாலை தொழிலாளர் சங்கச் செயலா ளர் சி.ஈஸ்வரமூர்த்தி, பாத்திர சங்கச் செயலாளர் கே.குப்புசாமி, மின் ஊழியர்  சங்க நிர்வாகி நாகராஜ், கூட்டுறவு பணி யாளர் சங்கத் தலைவர் கௌதமன்,  தையல் சங்க நிர்வாகி வேல்முருகன்,  பனியன் சங்கத்தின் துரைமுருகன், முருங்கப்பாளையம் தனபால் உள்ளிட் டோர் ரயில்வே  தொழிலாளர்களிடம் டி ஆர்இயுவுக்கு ஆதரவு திரட்டினர்.

சிஐ டியு மாநில துணைத் தலைவர் எம். சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். திருப்பூர் ரயில் நிலையத்திற்கு உட் பட்ட பகுதிகளில் மொத்த வாக்குகள்  341 வாக்குகள், இதில் இரண்டு நாட்க ளில் 306 வாக்குகள் (89.73%) பதிவாகி யுள்ளன. ரயில்களில் பயணத்தில்  இருக்கும் தொழிலாளர்களுக்கு (ரன் னிங் ஸ்டாப்) டிசம்பர் 6ஆம் தேதி குறிப் பிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள  அனைத்து ரயில்வே தொழிலாளர்க ளுக்கும் நடைபெறும் இந்த அங்கீ காரத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்று டிசம்பர் 12ஆம் தேதி வாக்கு கள் எண்ணப்பட உள்ளது.