கரூர், ஜன.27- குடியரசு தினத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கரூர் மாவட்டக் குழு சார்பாக தேசியகொடியேற்றி உறுதி மொழி ஏற்பு கூட்டம் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு நடை பெற்றது. கூட்டத்திற்கு எல்பிஎப் சங்க மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன், எல்பிஎப் சங்கம் பழ.அப்பாச்சாமி ஏஐடியுசி சங்க மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலு, ஏஐசிசிடியு சங்க மாவட்ட செயலாளர் எம்.பால்ராஜ், எல்.எல்.எப் சங்க மாவட்ட செயலாளர் சுடர்வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். பல்வேறு துறைவாரி சங்க மாவட்ட தலைவர்கள் ராஜாமுகமது, கிருஷ்ண மூர்த்தி, ஹோச்சிமின், பாலசுப்பிர மணியன், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாலிபர் சங்கம் கரூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற உறுதிமொழியேற்ப்பு கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ராஜா தலைமை வகித்தார்.
வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எம்.ஜோதிபாசு, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.ஹோச்சிமின் ஆகியோர் கூட்டத்தில் பேசினார். வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாத், அருண், ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குளித்தலை ஒன்றியம் குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக துவங்கி குளித்தலை பேருந்து நிலையம் வரை சென்று காந்திசிலை முன்பு உறுதிமொழி யேற்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் குளித்தலை ஒன்றிய தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் இரா.முத்துச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வாலிபர் சங்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு சார்பில் கிருஷ்ணராய புரம் பேருந்து நிறுத்தம் முன்பு உறுதி மொழியேற்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய தலைவர் வி.நாகராஜன், வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணன், விதொச மாவட்ட குழு உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுதந்திர போராட்ட தலைவர்களின் முகமுடியை அணிந்து கலந்து கொண்டனர்.