கரூர், அக்.30- அகில இந்திய அஞ்சல் - ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்ட பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.விஸ்வநாதன் வரவேற்றார். மாநில உதவி செயலாளர் என்.செல்வன் துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் பி.மோகன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா, அரசு ஊழியர் சங்கம் அறிவழகன் ஆகி யோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாவட்டத் தலைவராக ஆர்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளராக என்.விஸ்வநாதன், மாவட்டப் பொரு ளாளராக ஆர்.சுப்பையன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. கூட்டத்தில், ஜூன் 30ல் பணி ஓய்வு பெற்றோருக்கு நேஷனல் இன்கிரிமெண்ட் வழங்கி பென்ஷன் மறு நிர்ணயம் செய்தல் வேண்டும். ஊழியர் விரோத புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.