கரூர், ஜூன் 25 - கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 ஆவது வார்டு பொதுமக்க ளுக்கு சமுதாயக் கூடம், விளை யாட்டு மைதானம், நூலகம் அமைப் பதற்கான பணிகள் மேற்கொள் வதற்கு நிலத்தை தேர்வு செய்து முட்புதர்களை அகற்றி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 41 ஆவது வார்டு கவுன்சிலர் எம்.தண்டபாணி பணிகளை செய்து வருகிறார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 ஆவது வார்டில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் குறிப்பாக குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகளில், பெரும்பான்மை யான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள் ளார். மேலும் குடிநீர் வழங்கும் போது தானே முன் நின்று அனைத் துப் பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வரை, குடிநீர் வழங் கும் பணியை மேற்பார்வை செய் கிறார்.
இதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தால், அதனை நிறை வேற்றி முடித்தவுடன் சம்பந்தப் பட்ட மக்களுக்கு அந்த தக வலை தெரிவிக்கிறார். தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் அதிகாலை சென்று குப்பை மற்றும் சாக்கடை தூர்வா ரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
அதேபோல் துப்புரவு தொழி லாளர்களின் கோரிக்கைகளை யும் கேட்டறிந்து, மாநகராட்சி அலு வலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நிறைவேற்றித் தருகிறார். பொது மக்கள் கொண்டு வரும் கோரிக் கைகளை தொடர்ந்து நிறை வேற்றிட சிரித்த முகம் மாறாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆலோசனையுடன் தனது பணிகளை 41 ஆவது வார்டு மக்களுக்கு கவுன்சிலர் எம்.தண்ட பாணி சிறப்பாக செய்து தரு கிறார்.
சமுதாய கூடம், நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி
ஏழை, எளிய மக்கள் திரு மணம், காதணி விழா உள்ளிட்ட தங்களது இல்லங்களில் நடை பெறும் சுப நிகழ்ச்சிகளை நடத்துவ தற்காக, 41 ஆவது வார்டு மக்க ளின் பல ஆண்டுகளாக கனவாக இருக்கிற சமுதாய கூடம் வேண் டும் என்ற கோரிக்கையை நிறை வேற்றும் வகையில், அங்கு சமுதா யக் கூடம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்தார். பின்பு, சமுதா யக் கூடம் கட்டுவதற்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் பொதுமக்க ளின் பங்களிப்பு தொகை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தொ கையுடன் சேர்த்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது தனது சொந்த செலவில் அந்த இடத்தில் உள்ள முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி பொது மக்களுடன் இணைந்து நடவடிக்கையை துவங்கி உள்ளார்.
அதேபோல் ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், அரசு மற்றும் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய பயிற்சிகள், நூல்கள் கிடைத்திடும் வகையில் 41 ஆவது வார்டில் நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணியிடம் கோரிக்கை மனுவை வார்டு கவுன்சிலர் எம்.தண்டபாணி வழங்கியுள்ளார். நூலகம் அமைத்து கொடுப்பதாக செ.ஜோதிமணி எம்.பி., உறுதி கூறியுள்ளார்.
நூலகம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணியாக 41 ஆவது வார்டில் இடத்தை கண்டறிந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து கம்பிவேலி அமைக்கும் பணி களை நிறைவேற்றி உள்ளார்.
மேலும் என்.ஜி.ஜி.ஓ நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதி மக்களின் நிதி பங்களிப் புடன், பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் 41 ஆவது வார்டில் நடைபயிற்சி மேற்கொள்ள நடை மேடையுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்கள் விளை யாட்டு மைதானம் அமைத்திட வும், நிலம் கண்டறியப்பட்டு மண் கொட்டும் பணிகளை மேற்கொள் கிறார்.
இது போன்று மக்களின் கோரிக் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான பணிகளை செய்வதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாநகராட்சி 41ஆவது வார்டு கவுன்சிலர் எம். தண்டபாணி தொடர்ந்து நடவ டிக்கை எடுக்கிறார்.
தற்போது 41 ஆவது வார்டில் உள்ள தெருக்கள், தார்ச் சாலை கள், குடிநீர் தேவையில் போதிய அளவு நிறைவு பெற்றுள்ளன. முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த வார்டு தற்போது முன்னேற் றத்தை நோக்கி வளர்ச்சி அடைந் துள்ளது என்றால் மிகையில்லை என்று அப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர்.