கரூர், டிச.6- மாநில தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் கரூர் பரணி பார்க் வித்யாலயா பள்ளியில் பயிலும் 46 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகன ரெங்கன் தலைமை வகித் தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்கா வலர் எம்.சுபாஷினி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிர மணியன், மேனாள் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி இயக்குநர் ‘தமிழ்ச் செம்மல்’ முனைவர். சுந்தர ஆவுடை யப்பன் ஆகியோர் மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் (பபாசி) தலைவர் ‘குமரன் பதிப்பகம்’ சா.வை ரவன், பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் கே. சேகர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இருபால் ஆசிரி யர்கள் கலந்துகொண்டனர்.