districts

img

இலவச வீட்டு மனைப் பட்டாவை உரியவர்களிடம் ஒப்படைத்திடுக! வி.தொ.ச காத்திருப்பு போராட்டம்

கரூர், மார்ச் 14 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கொம்பாடிபட்டியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் சார்பில் பட்டியலின மக்க ளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.  வழங்கிய நாள் முதல் இன்று வரை இலவச வீட்டு மனையை உரியவர்களுக்கு ஒப்படைக்காமல் இருந்து  வந்துள்ளனர். இதனி டையே தங்களுக்கு ஒதுக்கப் பட்ட மனைகளை உரியவர்க ளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில்  கிருஷ்ணராயபுரம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் முத்துச்செல்வம் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னார்.

;