districts

img

நூறுநாள் வேலை வழங்கக் கோரி சிவாயம் ஊராட்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 18 - கரூர் மாவட்டம் கிருஷ் ணராயபுரம் ஒன்றியம், சிவா யம் ஊராட்சிக்குட்பட்ட இரும்பூதிபட்டி, ஈச்சம்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, வேலாங்காட்டுப்பட்டி, குப்பாச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை-எளிய மக்க ளின் வாழ்வாதாரத்தை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்  திட்டமான நூறு நாள்  வேலைதான் பாதுகாக் கிறது. இதை நம்பித் தான் அந்த மக்கள் வாழ்ந்து வரு கின்றனர்.

அவர்களுக்கு கடந்த பல  மாதங்களாக சிவாயம் ஊராட்சி நிர்வாகம் நூறு நாள் வேலை வழங்கா ததை கண்டித்தும், அனை வருக்கும் நூறு நாட்களும் வேலை வழங்க வேண்டும். தகுதி உள்ள மக்களுக்கு புதிதாக வேலை வழங்க, வேலைக்கான அட்டை வழங்கிட வேண்டும். பணித் தள பொறுப்பாளரை மாற்ற  வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் சிவாயம் ஊராட்சி  அலுவலகம் முன்பு செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்டச் செயலா ளர் பி.ராஜூ தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை  ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், கிருஷ்ண ராயபுரம் ஒன்றியச் செயலா ளர் ஜி.தர்மலிங்கம், குளித் தலை ஒன்றியக் குழு உறுப் பினர் எஸ்.பிரபாகரன், விதொச மாவட்டத் தலைவர்  கண்ணதாசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பேச்சுவார்த்தை 

கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை யில், நூறு நாள் வேலை  அனைவருக்கும் வியாழக் கிழமை முதல் வழங்கப்படும்  என்றும் பணித் தள பொறுப் பாளர் மீதான குற்றச் சாட்டை தொடர்ந்து, பணித் தள பொறுப்பாளரை மாற்று வது என்றும், அனைவருக் கும் நூறு நாட்கள் பணி  வழங்குவதாகவும் உறுதி யளித்தனர். 

இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.