districts

தோகைமலையில் பத்திரப் பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரூர், ஜூலை 25 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோகைமலை ஒன்றிய 8 ஆவது மாநாடு  தோகைமலை தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க ஒன்றியத் தலைவர் எம்.அழகேசன் தலைமை வகித்தார். விவசா யிகள் சங்கத்தின் முதுபெரும் தோழர் வேலுப் பிள்ளை சங்க கொடியை ஏற்றி வைத்தார்.  சங்க உறுப்பினர் எம்.பி. ரத்தினம் வரவேற்று பேசினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பி னர் வி.சிதம்பரம் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல், மாவட்ட பொருளாளர் மதவத்தூர், ஒன்றிய கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் பேசினர். ஏ.சுப்ரமணியன் நன்றி கூறினார். ஒன்றிய புதிய தலைவராக எம்.அழ கேசன், ஒன்றியச் செயலாளராக ஏ. முனியப்பன், பொருளாளராக எல்.சக்தி வேல், துணைத் தலைவராக சூப்பர் ரத்தினம்,  துணைச் செயலாளராக எம்.பாலு உள்பட 11  பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது. காவிரியில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை விவசாயிகள் பயன்பெறும் வகை யில் மாயனூர், பஞ்சப்பட்டி வழியாக தோகை மலை பகுதியில் உள்ள அனைத்து ஏரி குளங்க ளையும் நிரப்பிட வேண்டும். தோகைமலை பகுதியில் பத்திரப் பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும்.  தோகைமலையில் செயல்படாமல் உள்ள நூலகத்திற்கு, புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தோகைமலை ஒன்றியம், கழுகுகூரில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை பல மாதமாக திறக்கப் படாமல் இருப்பதை கண்டித்து ஜூலை 28  அன்று, கூட்டுறவு வங்கி முன்பு மனு கொடுக் கும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.