districts

img

சிபிஎம் குளித்தலை ஒன்றிய செயலாளராக இரா.முத்துச்செல்வன் தேர்வு

கரூர், ஜூலை 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் குளித்தலையில் நடை பெற்றது. கட்சியின் ஒன்றிய செய லாளர் எஸ்.பிரபாகர் தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர்  மா.ஜோதிபாசு சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜு, இரா.முத்துச்செல்வன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். குளித்தலை ஒன்றிய புதிய செயலா ளராக இரா.முத்துச்செல்வன் தேர்வு செய்யப் பட்டார்.  குளித்தலையில் மாவட்ட  தலைமை அரசு மருத்துவமனை தொடர்ந்து இயங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்கும் வரை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சி களுடன் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.