districts

img

கேஸ் சிலிண்டருக்கு மானியம் கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 21- ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து  செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆளுநர் கையொப்பமிட வேண்டும், ஒன்றிய மோடி அரசு கேஸ் சிலிண்டர் விலை யை குறைக்க வேண்டும், மானியம் வழங்  கிட வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்,  இளைஞர்களின் வாழ்க்கையை  சீரழிக்கும் போதைப்பொருட்களுக்கு தடை  விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்  கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் வேலா யும்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் சுமதி தலைமை வகித்தார். மாநிலக்  குழு உறுப்பினர் ஆர்.வனஜா விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் வி.சசி கலா, கரூர் ஒன்றியச் செயலாளர் அ.இந்து மதி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கள் கலந்துகொண்டனர்.