districts

img

தரமற்ற சாலை, மின்கம்பம் சீரமைக்கப்படுமா? பேரூராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் போராட்டம்

கரூர், டிச.6- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூ ராட்சிக்குட்பட்ட மஞ்சமேடு, மணி நகரில் தரமற்ற நிலையில் உள்ள சாலை, மின் கம்பத்தினை சீரமைக்காத பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணி நகர் கிளை சார்பில் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் கிளை செய லாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித் தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.பார்த்தி பன் வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் விளக்கிப் பேசினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.தர்மலிங்கம், விவ சாய சங்க மாவட்டப் பொருளாளர் சுப்பிர மணியன், விதொச மாவட்ட தலைவர் ஓ.கே. கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ண ராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவ ராணி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சாலைகள் உதவி செயற்பொ றியாளர் மற்றும் உதவி பொறியாளரை கொண்டு நேரில் ஆய்வு செய்து, ஏற்கனவே  பணி மேற்கொள்ளப்படும் ஒப்பந்ததாரம் மூலம், தரமான முறையில் சாலை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் தற்காலிகமாக கைவிட்டப்பட்டது.

;