districts

img

கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கரூர், நவ.19 - 30-வது தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாடு கரூர் பரணி பார்க் கல்விக்  குழுமத்தில்  நடைபெற்றது.  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பரணி பார்க் பள்ளியில் 1304  இளம் விஞ்ஞானிகளால் 660 அறிவியல்  ஆய்வுகளும், பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் 866 இளம் விஞ்ஞானி களால் 436 அறிவியல் ஆய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தேர்வு பெறும் சிறந்த படைப்புகள் முறையே மாவட்ட, மாநில அறிவியல் மாநாடு களில் பங்குபெறும்.       தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பரணி பார்க் கல்விக்  குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன்  தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரங்கன், அறங்காவலர் எம். சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எல்.நாராயண சுவாமி பேசுகையில் “பரணி பார்க்  கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து 16  ஆண்டுகளாக அனைத்து மாணவர்க ளையும் தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாட்டில் பங்கேற்க செய்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக 10,772  அறிவியல் ஆய்வுகள் 32,295 இளம்  விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட் டது” என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர்  மாவட்டச் செயலாளர் ஐ.ஜான் பாஷா, கரூர் மாவட்ட அறிவியல் இயக்க துணை தலைவர் ரோட்டரி பாஸ்கரன் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் வி.ஆரோக்கிய பிரேம்குமார் வாழ்த்தி  பேசினர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனை வர் சி.ராமசுப்ரமணியன் சிறப்புரை யாற்றினார். பரணி வித்யாலயா பள்ளி  முதல்வர் எஸ்.சுதாதேவி, பரணி பார்க்  பள்ளி முதல்வர் கே.சேகர், துணை  முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட னர்.