நாகர்கோவில், ஏப்.23- கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உட்ட ஏப்.23 சனியன்று அதிகாலையில் இடி மின்னலுடன் சுமார் 5 மணி நேரம் மழை கொட்டியது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருளப்ப புரம் பகுதியில் அதிகாலையில் மின்னல் தாக்கி சுமார் 15 வீடுகளில் மின்சாத னங்கள் பழுதடைந்தன. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளியன்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்குப் பிறகு மாவட் டத்தின் மேற்கு பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது. நாகர்கோவில், சுசீந்தி ரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலையில் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந் தது. நாகர்கோவிலில் சனியன்று அதி காலை 1.30 மணிக்கு பெய்ய தொ டங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடை விடாமல் கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, மீனாட்சி புரம் சாலை, அசம்புரோடு பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஆறாக ஓடியது. இட லாக்குடி, கோட்டார் பகுதியில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து ஓடிய தால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மாம்பழத்துறையாறில் அதிகபட்ச மாக 79 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதை யடுத்து அங்கு மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
அருவியில் குளிப்ப தற்கு சனியன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளி லும் சனியன்று காலை முதலே மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பாலமோர் மலைப் பகுதியிலும் மழை கொட்டியது. அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் சனி யன்று காலை 39.80 அடியாக இருந்தது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.45 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 9.54 அடியாக வும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.10 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 8.37 அடியாக வும் உள்ளது. மாவட்டம் முழுவதும் தொ டர்ந்து பெய்து வரும் கோடை மழை விவ சாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. சனியன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு: பேச்சிப்பாறை 27.2 மி.மீட்டர், பெருஞ் சாணி 9.2, சிற்றாறு-1-4, சிற்றாறு-2-3.5, மாம்பழத்துறையாறு 79, நாகர்கோவில் 72.4, பூதப்பாண்டி 35.2, சுருளோடு 28.4, கன்னிமார் 28.2, ஆரல்வாய்மொழி 20, பாலமோர் 17.4, மயிலாடி 42.2, கொட்டா ரம் 15.2, நிலப்பாறை 15.6, இரணியல் 12.4, ஆணைக்கிடங்கு 77.2, குருந்தன் கோடு 21.2, அடையாமடை 32, கோழிப் போர்விளை 67, புத்தன் அணை 10.4, திற்பரப்பு 54 மி.மீட்டர்.