districts

கஞ்சா பறிமுதல்:  2 பேர் கைது

நாகர்கோவில், மார்ச் 22- நாகர்கோவிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  நாகர்கோவில் கோட்டார் காவல்துறையினர் திங்க ளன்று (மார்ச் 21) ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத் திருந்த மூடையில் 21 கிலோ  கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் ரயில்வே காலனியை சேர்ந்த நம்பிரா ஜன் (24), வாகையடி தெருவை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்ற சைனா கோழி  (26) என்பதும், அவர்கள் கஞ்சா வியாபாரி என்பதும்  தெரிய வந்தது. அதைத்தொ டர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு வரையும் கைது செய்தனர்.