நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதி களிலும் நகர்புறங்களிலும் மாடு வளர்ப்பு நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் மாட்டுப்பொங்கல் களையிழந்தது. குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ரப்பர், தென்னை, வாழை போன்றவை பயிரிடப்படு வதால் மாடு வளர்ப்பில் ஈடுபடுவோர் குறைவு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கியது தோவாளை, அகஸ்தீஸ்வ ரம் தாலுகாக்கள். நாஞ்சில் நாடு என அறியப்பட்ட இந்த பகுதிகளிலும்கூட தற்போது விவசாயத்துக்கு மாடுகளை பயன்படுத்துவது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரமாகிப் போனது. செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் எருவுக்காக மாடு வளர்க்கும் தேவையும் அருகிப் போய்விட்டது. நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் 5 மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்கிறார் கிருஷ்ணனும் அவரது மனைவி பார்வதியம்மா வும். முன்பு 15 மாடுகள் வரை வளர்த்து வந்துள்ள னர். ஒரு கட்டு வைக்கோல் விலை 350 ரூபாய், மற்ற தீவன விலைகளும் உயர்ந்துவிட்டன. முன்புபோல வெளியே எங்கும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் முடியாது. கட்டி வைத்துதான் தீனி போடணும். பராமரிப்புச் செலவு அதிகம். மாடு வளர்ப்பதையே கைவிடும் அளவுக்கு நெருக்கடியாக உள்ளது என தெரிவித்தனர். செழிப்பான வனங்கள் நிறைந்தது குமரி மாவட்டம். ஆனால், மலைப்பகுதிகளில் மாடு வளர்ப்பு மிகவும் குறைவு. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி கூறுகையில், பெரும்பாலான இடங்களில் பணப்பயிரான ரப்பர் மரங்கள் வளர்ப்பதால் மாடு வளர்ப்பில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என தெரிவித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரெகு கூறுகையில், இந்த பகுதியில், கடையாலு மூட்டில் ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இருந்தது. அதையும் மூடிவிட்டார்கள். பழங்குடி யின மக்களுக்கு மாடுகள் கொடுத்தும் பால் கொள்முதல் செய்தும் அரசு ஊக்கப்படுத்தலாம் என்றார். கோட்டூர்கோணம் பால் உற்பத்திகூட்டுறவு சங்க தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க (ஆவின்) நிர்வாக குழு உறுப்பினருமான எஸ்.சி.ஸ்டா லின்தாஸ் கூறுகையைில், குமரி மாவட்டத்தில் பாலின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி மிக குறைவு. வெளி மாவட்டங்களில் இருந்துதான் பால் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. ஆவினில் கொள்முதல் விலை குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என்றார். ஆவின் மேலாளர் ரவி கூறுகையில், குமரி மாவட்டத்தில் 53 பால் உற்பத்தியாளர்கள் ஆரம்ப கூட்டுறவு சங்கம் இருந்தாலும் பெயரளவுக்கே செயல்பாடு உள்ளது. தினம் 33 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்வதில் 6 முதல் 7 ஆயிரம் லிட்டர்தான் ஆவினுக்கு வருகிறது என்றார். குமரி மாவட்டத்தின் தேவையில் பெரும்பகுதியை சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தி வளர்ந்து வரு கின்றன. புதிய நிறுவனங்களும் பெருகி வரு கின்றன. அருகில் உள்ள கேரளத்தில் பால் உற்பத்தியில் தன்னிறைவு என்கிற குறிக்கோளு டன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குமரி மாவட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கும். அது குறித்து ஆவின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பால் உற்பத்தியை அதிகரிக்க வும் கொள்முதல் செய்யவும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்பது நுகர்வோர் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.