நாகர்கோவில், ஏப்.18- 2022 ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2022 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 2022 மார்ச் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட விவ சாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில் கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் நேரில் பெறப் படும். கோரிக்கை மனுக்களை பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப் பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவ சாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்துள்ளார்.