சிதம்பரம், நவ. 30- சிஐடியு போராட்ட எதிரொலியால் திரையரங்கு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரத்தில் லேனா, வடுக நாதன் என இரண்டு திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் 9 பேர் கடந்த தீபாவளிக்கு முன் முரண்பாடு கள் காரணமாக பணியிலிருந்து வெளி யேறியுள்ளனர். இதனால் போனஸ் வழங்க திரையரங்கு உரிமையாளர் மறுத்துள்ளார். இந்த பிரச்சனையில் சிஐடியு தலை யிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அதனைத் தொடர்ச்சியாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தொழி லாளர்களுக்கு போனஸ் தருவதாக ஒப்புதல் அளித்து திரையரங்கு தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு சங்கத் தலைவரும் நகர மன்ற துணைத் தலைவருமான முத்துகுமரன், சிஐடியு மாவட்ட நிர்வாகி சங்கமேஸ்வரன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி கலியமூர்த்தி, சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.