districts

img

வடலூரில் வள்ளலார் 200ஆவது ஆண்டு விழா

சிதம்பரம், ஜன். 7- கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ள லார் பிறந்த 200ஆவது ஆண்டு மற்றும் அவர் தர்மசாலை தொடங்கிய 156ஆவது ஆண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திறந்தவெளி கருத்தரங் கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி வரவேற்றார். “பசிப்பிணி போக்கும் அணையா அடுப்பு” என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், “வெயிலுக்கு உறங்கும் விருட்சம் அழிக்காதே” என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், “புனைந்துரை ஏன் பொய் புகழே” என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் பேசினர். இதில் மூத்த தலைவர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருத வாணன், உதயகுமார், கருப்பையன், சுப்பு ராயன், ராமச்சந்திரன், திருஅரசு, அசோகன், டி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.