districts

img

மாணவர்களுக்கு ஜி. ராமகிருஷ்ணன் பாராட்டு

கடலூர், ஆக. 20- புதுதில்லியில் தேசிய அளவிலான அக்கிடோ பாக்சிங் போட்டிகள் நடை பெற்றது. இதில் கடலூரை சேர்ந்த மாண வர்கள் சரத், திலீபன், கார்த்திக் ஆகி யோர்  வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர்.இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்டச் செயலாளர் திலகர், சிபிஎம் மாவட்டச் செயலாளர்  கோ.மாதவன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வி. குளோப், குடியிருப்போர் நல சங்கங்களில் கூட்டமைப்பு பொதுச்  செயலாளர் எம்.மருதவாணன், எஸ்.கே.தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;