districts

img

திருக்கோயில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர், ஜூன் 26- திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர் களுக்கு கடலூரில் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி யது. திருக்கோவில் பணி யாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரி சோதனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி இரு ந்தது. அதன்படி கடலூர் மண்டல இந்து சமய அற நிலையத்துறை சார்பில் திருக்கோவில் பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கடலூர் கூத்தப்பாக்கத்தில் புதன் கிழமை நடைபெற்றது.

இணை ஆணையர் பரணி தரன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சந்திரன் முன்னிலை வகித்தார் இதையடுத்து மருத்துவ குழுவினர் கடலூர், காட்டு மன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்து வம், பல் மருத்துவம், கண்  சிகிச்சை, ரத்தப் பரிசோ தனை, இ ஜி சி, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் கோவில் செயல் அலுவலர் கள், சரக ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த மருத்துவ முகாம் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை  நடைபெற உள்ளது. இதில்  வியாழக் கிழமை குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி தாலு காவுக்கும், வெள்ளிக் கிழமை அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் பணியாளர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப் படுகிறது.