கடலூர்,ஜூன் 21 - வறட்சியால் பாதிக்கப் பட்ட முந்திரி விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத் தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பருவமழை பொய்த்த தால் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட முந்திரி, பலா, மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண் டும், முந்திரிக்கொட்டைக்கு நியாயமான விலை கிடைத் திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு சார்பில் கொள்முதல் நிலை யம் அமைத்திட வேண்டும், அனைத்து முந்திரி விவசாயி களுக்கும் ஆண்டுதோறும் இடுபொருட்கள் மானியத் தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயி கள் சங்கத்தின் வட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க மாநில செய லாளர் துரைராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், விதொச மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன், விதொச வட்ட நிர்வாகிகள் பன்னீர், முருகன், கணேசன், சரவணன், லோகநாதன், ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக போராட்டக் களத்திற்கு வந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.