கடலூர்,ஜூன் 19 - கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாச் என்னும் பாது காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரெட் போர்ஸ் எனப்படும் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் தீவிரவாதிகள்போல் சாதாரண உடையில் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார் கள். இவர்களை புளு போர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர்,
ஊர் காவல் படையினர், கப்பல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறை உதவியுடன் ஊருக் குள் நுழையாமல் பிடிக்க வேண்டும். புதன்கிழமை காலை 5 மணி முதல் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தேடுதல் பணி யில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதில் கடலோர பாதுகாப்பு படை ஆய்வாளர் பத்மா தலைமையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாபேட்டை கடல் பகுதியில் ஒரு படகில் வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். இதேபோல புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடல் பகுதியில் ஒரு படகில் வந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்ட கடலோர பகுதி களில் தொடர்ந்து காவல்துறையினர் தேடு தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.